Home முக்கியச் செய்திகள் மாறு வேடத்தில் சென்ற போதா செவ்வந்தி கைது செய்யப்பட்டார் : அரசை சாடும் கம்மன்பில

மாறு வேடத்தில் சென்ற போதா செவ்வந்தி கைது செய்யப்பட்டார் : அரசை சாடும் கம்மன்பில

0

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை காவல்துறை அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக அனுசரணை வழங்கியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இதற்கு முன்னரும் குடு சலிந்து, ஹரக்கட்டா, மாகந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் எவ்வித ஊடக பிரபலமும் வழங்கப்படவில்லை.

குற்றவாளிகள் கைது

நேபாளம் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டது முதல் ஒலுகல செவ்வந்தி பக்கத்தில் அமர்ந்திருந்தது முதல் இலங்கை வரும் வரை அனைத்தையும் ஊடகங்களில் காண்பித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் அடையாளம் காண்பதற்கான அடையான அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் செவ்வந்தியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து விட்டனர். அதனால் இவரால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியங்களுக்கு பெரும் தவறு நடந்துள்ளது.

அரசாங்கம் செய்த பாரிய தவறு 

அரசாங்கத்தின் உறுப்பினர்களே இந்த குற்றவாளிகளை வர்ணிப்பதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

இவர்களை சிறுவர்கள் நாயகர்களாக நினைக்க கூடும். அதனால் அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் பெயர்களை கொண்டு அழைக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version