Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு!

ஜனாதிபதி தேர்தல் கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர் திடீரென உயிரிழப்பு!

0

வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய காவல் உத்தியோகத்தரொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய காவல் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், பொலனறுவை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று (21) பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திடீரென உயிரிழப்பு

இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலனறுவை சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக சுமூகமான மற்றும் பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக சுமார் 63,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version