Home முக்கியச் செய்திகள் அரகலய காணொளிகளை பகிர்ந்தால் சிக்கல் : காவல்துறை விடுத்த எச்சரிக்கை

அரகலய காணொளிகளை பகிர்ந்தால் சிக்கல் : காவல்துறை விடுத்த எச்சரிக்கை

0

அரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் வாகன சோதனைகள் மற்றும் 2022 மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த காட்சிகள் என நாட்டின்பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தவறாக வழிநடத்தப்படும் பொதுமக்கள்

இந்த காணொளிகள் கடந்த கால நிகழ்வுகளை நடப்பு நிகழ்வுகளாக காட்டி தவறான கதையை உருவாக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதுபோன்ற சரிபார்க்கப்படாத காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் வலியுறுத்தினர்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version