ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளின் இராஜதந்திரப் பதவிகளில் அரசியல் ரீதியாக நியமிக்கப்படவுள்ள சிலரின் விபரங்கள் தற்போதைக்கு வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சரும், இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளார்.
இங்கிலாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகராக இலங்கை நிர்வாக சேவையின் கனிஷ்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் மனைவி
தற்போதைக்கு அவர் இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து பகுதி பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்படிப்பைத் தொடர்ந்து கொண்டே அங்கு சுத்திகரிப்புப் பணியாளராக பணியாற்றுகின்றார்.
அதே போன்று ஐக்கிய நாடுகள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்துக்கு நியமிக்கப்படவுள்ள சொனாலி சமரசிங்க, அவுஸ்திரேலிய பிரஜா உரிமை கொண்டவர் என்பதுடன், இவர் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
