Home இலங்கை பொருளாதாரம் ஜப்பான் நிதியுதவியுடன் மின்மாற்ற மார்க்கம் திறப்பு

ஜப்பான் நிதியுதவியுடன் மின்மாற்ற மார்க்கம் திறப்பு

0

ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஹபரணை – வெயங்கொட மின்மாற்ற மார்க்கத்தை
இலங்கை திறந்து வைத்துள்ளது.

இந்தத் திட்டம் நாட்டின் கடன் நெருக்கடியால் தாமதமாகியிருந்தது.

கடந்த ஆண்டு நிறுத்தி
வைக்கப்பட்ட நிதியுதவி மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து முடிக்கப்பட்ட முதல்
யென்-கடன் திட்டம் இதுவாகும் என்று ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா
பாராட்டியுள்ளார்.

மின் விநியோகத் தோல்விகள்

அதிக திறன் கொண்ட மின்மாற்ற மார்க்கம் மின்மாற்ற இழப்பு மற்றும் காபன் உமிழ்வைக் குறைப்பதோடு மின் நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும்.

சமீபத்திய மின் விநியோகத் தோல்விகளைத் தடுக்க இது உதவும் என வலுசக்தி அமைச்சர்
குமார ஜயக்கொடி கூறியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/power-transmission-line-opens-with-japan-funding-1757151441

NO COMMENTS

Exit mobile version