விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தை பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த பிரதீப், லவ் டுடே படத்தின் மூலம் திறமையான நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார். அடுத்ததாக இவர் நடிப்பில் டிராகன் திரைப்படம் வருகிற 21ம் தேதி வெளிவரவுள்ளது.
விஜய்க்கு கதை சொன்ன பிரதீப்
இந்த நிலையில், சமிபாடிய பேட்டி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், தளபதி விஜய்க்கு கோமாளி படத்திற்கு பின் கதை, கூறியுள்ளார். ஆனால், அப்படம் அதன்பின் நடக்கவில்லை.
இப்படியிருக்க விஜய்க்கு கூறிய கதையில் தானே நடிக்கப்போவதாகவும், மேலும் அது ஒரு சைன்ஸ் பிக்ஷன் படம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Source: https://cineulagam.com/article/pradeep-ranganathan-talk-about-thalapathy-vijay-1739530301
