Home இலங்கை அரசியல் இலங்கை தேர்தல் முடிவு குறித்தான கருத்து கணிப்பு: மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை தேர்தல் முடிவு குறித்தான கருத்து கணிப்பு: மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

0

இலங்கை தேர்தல் தொடர்பில் தகவல் எதனையும் வெளியிடவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டும் எனவும், தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தை பெறும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இவ்வாறான எந்தவொரு கருத்துக் கணிப்பையும் வெளியிடவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

கொழும்பு அலுவலகம் மறுப்பு 

 ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இந்த மறுப்பினை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் ஒர் வதந்தி என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version