Home இலங்கை அரசியல் சியம் நிக்காய மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த புதிய ஜனாதிபதி

சியம் நிக்காய மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த புதிய ஜனாதிபதி

0

புதிய இணைப்பு

ஜனாதிபதி பதவியின் பொறுப்புகளை கையேற்ற பின்னர் இன்று (23) பிற்பகல் கண்டி மல்வத்து மகாவிகாரையின் சியம் மகாநிக்காயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கதேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்கதேரரை அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சந்தித்துள்ளார்.

மேலும், அஸ்கிரிய மகாவிகாரையின் சியம் மகாநிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake )கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த விஜயமானது இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப்பிரமாணம் 

இன்று காலை (23) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கையின் முப்படைகளின் தளபதிகளுடனும் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

@tamilwinnews தலாதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர! #Lankasri #Tamilwin #Srilanka #Kandy #thalathamalikai ♬ original sound – தமிழ்வின் செய்திகள்

https://www.youtube.com/embed/sxIKJd1CuRM

NO COMMENTS

Exit mobile version