Home இலங்கை அரசியல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் – அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் – அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

0

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.

இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

பதவிப் பிரமாணம்

இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தோல்வி

காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாஸவும் தோல்வி அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version