Home இலங்கை அரசியல் மன்னாரில் மந்தகதியில் இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பு

மன்னாரில் மந்தகதியில் இடம் பெறும் தபால் மூல வாக்களிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலவாக்கு பதிவுகள் மன்னார் (Mannar) மாவட்டத்தை பொறுத்தவரையில் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரச அதிகாரிகளும் வாக்களிப்பில் ஆர்வம் இல்லாமல் காணப்படும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் (Sri Lanka) ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொது தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் (04) ஆரம்பமாகி இன்றும் (05) இடம் பெற்றுவருகின்றது.

தபால் மூல வாக்களிப்பு

அந்தவகையில், தபால் மூல வாக்களிப்புக்கு என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரச திணைக்களங்களில்
இன்றையதினம் (05) காலை தொடக்கம் அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்தி
வருகின்றனர்

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த
எண்ணிக்கை 712,319 ஆகும்.

மேலும், தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு
வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/presidential-election-postal-vote-in-mannar-1725522435

NO COMMENTS

Exit mobile version