Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானம் – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானம் – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் தம்மிடம்
கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் இது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்க உள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe)
தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் (SLFP) மத்திய செயற்குழுவில் அங்கம்
வகிக்கும் பலர் என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.

பெளத்த தேரர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் இவ்வாறானதொரு
கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து நன்றாக சிந்தித்து எதிர்வரும் வாரங்களில் இறுதித்
தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன்.

நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.

எதிர்வரும் தேர்தல் வித்தியாசமானது தீர்மானம்மிக்கது” எனவும் தெரிவித்துள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

நாட்டின் பொருளாதாரம் உறுதி நிலையை அடைந்துள்ளது : செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்கும் நிலையில் இலங்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version