Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வலய தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வலய தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடல்!

0

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி
அலுவலர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது இன்று 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்
தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

வாக்களிப்பு நடவடிக்கைகள்

இக்கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்  இ.கி.அமல்ராஜ் பங்குபற்றினார்.

இந்நிலையில், நாளைய தினம் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

]

NO COMMENTS

Exit mobile version