Home இலங்கை சமூகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் சாத்தியம்!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் சாத்தியம்!

0

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை சங்கத்தின் தலைவர் நிலுக்ச குமார(Niluksa Kumara) தெரிவித்துள்ளார்.

பொருட்களினதும் விலை

கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 ஆம் ஆண்டிற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version