பிரியாமணி
பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
போலி முகமூடி எனக்கு தேவையில்லை.. தங்கலான் பட நடிகை பார்வதி ஓப்பனாக சொன்ன விஷயம்!
ஷாக்கிங் பேட்டி!
இந்நிலையில், அரவிந்த் சுவாமியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பிரியாமணி பகிர்ந்த விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” எனக்கு மணிரத்னம் சார் மிகவும் பிடித்தமான நடிகர். அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால், அந்த படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் நான் தயாராக இருக்கிறேன்.
அவரது படத்தில் நடிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். அதை நான் என் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எனக்கு அது குறித்து கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
