Home இலங்கை அரசியல் சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் கடும் மோதல்: கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் கடும் மோதல்: கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கட்சி உறுப்பினர்கள் இன்று (25) கொழும்பில் அவசரமாக கூடவுள்ளனர்.

இன்று (25) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு 10, டீ.பீ.ஜயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆசன அமைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/problems-within-sri-lanka-freedom-party-1714006661

NO COMMENTS

Exit mobile version