Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கைது செய்யக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கைது செய்யக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்

0

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புபட்ட
சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் மட்டு காந்தி பூங்காவின் முன்னால் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு
கூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு
ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது அரசே கொலையாளிகளை மறைக்காதே, குண்டுவெடிப்பின் கூத்திரதாரிகளை கைது
செய், சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தார வேண்டும், 5 ஆண்டு
கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா? போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷகள்
எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற விசேட வழிபாடுகள்

கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல் – உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்

You May like this video


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version