Home இலங்கை சமூகம் இலங்கையின் சுகாதாரத்துறை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையின் சுகாதாரத்துறை தொடர்பில் வெளியான தகவல்!

0

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை சேவைகளைப் பெற முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால (Palita Mahipala) இதனை தெரிவித்துள்ளார்.

நோய் தடுப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென மாத்தளை (Matale) மற்றும் தம்புள்ளை (Dambulla) வைத்தியசாலைகளின் கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை

அத்துடன், இலங்கை பிரஜை ஒருவர் வருடத்திற்கு ஆறு தடவைகள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று என சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பிலும் ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலப்படுத்தப்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைக்கலாம் எனவும் சிகிச்சை காலத்தை அதிகரிப்பதன் ஊடாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்பகல் 4 மணிக்கு பின்னர் சிறு நோய்களுக்கும் வைத்தியசாலையில் அனுமதிப்பதன் ஊடாக செலவும் அதிகரிப்பதாக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார். 

Source: https://ibctamil.com/article/public-health-department-evaluation-of-sri-lanka-1718641732

NO COMMENTS

Exit mobile version