Home இலங்கை அரசியல் தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்ட சம்பந்தன்

தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்ட சம்பந்தன்

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் என்ற பெயரை கொண்ட மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இறுதி கட்டத்தில் ஒரு கையாளாகாத ஒருவராகவும், கட்சியின் அண்மைய அரசியல் செயற்பாட்டினால் மனம் வெறுத்த நிலையிலும் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதாவது ஒரு கட்சியின் தலைவர் மறைந்த பின்னர் தனது தலைவரின் உடலை வைத்து கூட்டு துக்கமாக அஞ்சலி செலுத்த சம்பந்தனின் அரசியல் வாரிசுகள் தவறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,   

 

 

NO COMMENTS

Exit mobile version