Home இலங்கை அரசியல் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியம் கோரும் ராஜித

ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியம் கோரும் ராஜித

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஐக்கியம் இருக்க வேண்டும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கூறியது சரியானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

இதுவே நாட்டுக்கான சிறந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம்

“விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒத்துழைக்குமாறு பிரேமதாசவை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன்.ஆனால் அவர் இந்த நடவடிக்கைக்கு எதிராகவே செயற்படுகிறார்’ என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் விரக்தியடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய முடியும் என இன்னமும் நம்புகின்றனர்.

‘இருப்பினும், சில உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற காத்திருக்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், இறுதிக்கட்டத்துக்கு வரும்போது அதனை செய்வார்கள்”என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version