Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பகுதிக்கும் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றும் செயற்பாடுகள் தாமதமாகி வருவதால், இது குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த வியாழக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆரம்ப கட்ட நிதி

முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கிராம அபிவிருத்திக் குழுக்களின் முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அத்துடன், 2024 பாதீட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்துக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காசா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனையிலிருந்து நிதி கையளிப்பு

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார்…! தொடரப் ​போகும் மர்மம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version