Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

யாழ்ப்பாணத்தில் ரணில் சூறாவளி பிரசாரம்

0

யாழ்ப்பாணத்திற்கு(jaffna) இன்றைய தினம்(14) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் நாவந்துறை சென் மேரிஸ் மைதானத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா(douglas devananda) தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்

கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

மாங்குளம் நகரில் தேர்தல் பிரச்சார பணி

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தலைமையில் தேர்தல் பிரச்சார பணி மாங்குளம் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் மக்களின் எதிர்பார்ப்பு அமைப்பின் ஆணையாளர் சமந்த பண்டார மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வர்த்தக நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.    

Source: https://ibctamil.com/article/ranil-campaign-in-jaffna-1726302394

NO COMMENTS

Exit mobile version