Home இலங்கை அரசியல் தம்புள்ளை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக பதாகைகள் மர்மநபர்களால் தாக்குதல்

தம்புள்ளை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக பதாகைகள் மர்மநபர்களால் தாக்குதல்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தம்புள்ளை (Dambulla) தொகுதியின் செயற்பாட்டு அலுவலகத்திற்கு
முன்பாக உள்ள பதாகைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை மாநகரசபையின் முன்னாள் தவிசாளர் மாயா பதெனியவின் வீட்டில் இந்த
அலுவலகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)  மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின்
உருவம் பொறிக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் தம்புள்ளை காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/ranil-election-poster-damage-in-unp-dambulla-1720594879

NO COMMENTS

Exit mobile version