Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாசவால் அனுரவை தோற்கடிக்க முடியாது : ரணில் பகிரங்கம்

சஜித் பிரேமதாசவால் அனுரவை தோற்கடிக்க முடியாது : ரணில் பகிரங்கம்

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் (Sajith Premadasa) அனுர குமார திஸாநாயக்கவை தோற்கடிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மத்துகமையில் நேற்று (05.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, விவசாயத் துறையை மேம்படுத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு இறக்குமதியையும் அதிகரிப்பதே எமது முதல் திட்டம் ஆகும்.

அஸ்வெசும உரிமை

இரண்டாவதாக வரிச்சுமையை இலகுவாக்க வேண்டும். அதனையடுத்து பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றமடைய செய்வதால் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்.

அதனையடுத்து, அஸ்வெசும உரிமையை பாதுகாப்பது எங்களின் திட்டமாகும்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி பொருளாதாரம் விரிவடையும் போது நாட்டின் வருமானமும் அதிகரிக்கும். இதன்மூலம், வரிச்சுமையை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளதுடன், சஜித் பிரேமதாச பாடம் நடத்திய வகுப்பிற்கு கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியரே வருகை தருவார்” என சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version