Home இலங்கை அரசியல் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ரணில் வெளியேறியதாக தகவல்

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து ரணில் வெளியேறியதாக தகவல்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

வழங்கப்பட்டுள்ள பணிப்புரை

அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version