Home இலங்கை அரசியல் தேசிய பட்டியல் சர்ச்சை: ரவி கருணாநாயக்க பகிரங்க அறிவிப்பு

தேசிய பட்டியல் சர்ச்சை: ரவி கருணாநாயக்க பகிரங்க அறிவிப்பு

0

எமது கட்சியில் உள்ள இருவரின் சுயநலத்திற்காக முழுக் கட்சியையும் பலிகொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பகிரங்கமாக  அறிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியல் சர்ச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான அனைத்தும் சட்டத்திற்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர் விளக்கமளித்துள்ளனார்.

பதவி தொடர்பில் பிரச்சினை

உறுப்பினர் பதவி தொடர்பில் பிரச்சினை இருப்பின் அதனை சட்டரீதியாக கையாள வேண்டும் எனவும் இது இரண்டு அல்லது மூன்று பேரின் தனிப்பட்ட நோக்கத்திற்காக பொய்யான கருத்துக்களாக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும். இரண்டு நபர்களுக்காக ஒட்டுமொத்த கட்சியையும் பலிகடா ஆக்குவதை அனுமதிக்க முடியாது’’ என்றார்.

You may like this


NO COMMENTS

Exit mobile version