கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன்
பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இன்று (29.10.2025) மாவட்ட செயலகத்தில் வைத்து
இராணுவத்தினர் கையளித்திருந்தனர்.
பிரதேச செயலாளர்
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர்
த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
