Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

0

யாழ் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கிருஷ்ணமீனன் (Krishnamenan) தலைமையில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியிடப்பட்டுள்ளது.

உரும்பிராயில் உள்ள பொன்.சிவகுமாரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து தேர்தல் விஞ்ஞானத்தின் முதல் பிரதியினை பொன்.சிவகுமாரனின் சகோதரியிடம் இன்றையதினம் (18.10.2024) வழங்கி வைத்து தங்களுடைய பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிருஷ்ணமீனன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பல்கலைகழக பின்னணி

‘தமிழ் மக்களுடைய பழைய, முன்னாள் தலைவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்பதை காரணமாகவைத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை என்று தீர்மானிப்பதை ஏற்கமுடியாது.

நாங்களும் பல்கலைகழக பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் மக்கள் ஊடாகவே எடுத்துச் செல்வோம்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என ரில்வின் சில்வாவுக்கும் சர்வதேச தரப்புகளுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

எமது மக்களின் மனம்நோகும் வகையிலும் எமது மக்கள் இதற்காக செய்த போராட்டங்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என ரில்வின் சில்வா உள்ளிட்ட தென்னிலங்கைத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம், என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version