Home முக்கியச் செய்திகள் மறைந்த இரா.சம்பந்தனுக்கு முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த இரா.சம்பந்தனுக்கு முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு

0

இலங்கை (Sri Lanka) தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுடைய (R. Sampanthan) நினைவேந்தல் வடமராட்சி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தலானது இன்று (02) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சி

இதனடிப்படையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடியானது துக்கத்தை அனுஸ்டிக்கும் முகமாக அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் சம்பந்தனுடைய உருவப் படத்திற்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சந்திரலிங்கம் சுகிர்தன் (Chandralingam Sukirtan), தர்மலிங்கம் (Dharmalingam) மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் அஞ்சலியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version