Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு: வெளியான மகிழ்ச்சி தகவல்

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான நிகழ்நிலை முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிடப்படுகிறது.

கடவுச்சீட்டு தொகை

மேலும், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ‘P’ பிரிவின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளது.

இந்த தொகைக்கு கூடுதலாக, நவம்பர் இறுதியில் மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுக்களும், டிசம்பரில் மேலும் 150,000வெற்று கடவுச்சீட்டுக்களும் இறுதியதாக 750,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளன.

புதிய கையிருப்பு 

இந்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது நாளொன்றுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகிறது.

அதன்படி, மேற்படி கையிருப்பு பெறப்பட்டதன் மூலம், இத்தொகையை டிசம்பர் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவிற்கு பொருந்தும் வகையில் கடவுச்சீட்டுகளை திணைக்களத்திற்கு வழங்க முடியும்.

Source: https://ibctamil.com/article/resolution-to-passport-issue-sri-lanka-from-dec-1730468644

NO COMMENTS

Exit mobile version