Home முக்கியச் செய்திகள் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

0

தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து, கருமையடைந்து காணப்படும்.

இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.

இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

முகத்தின் பளபளப்பு

அரிசி மற்றும் அரிசி நீரானது, முகம் மற்றும் உடலின் பொலிவு, பளபளப்பை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் பச்சரிசி,தயிர்,பால் போன்றவற்றை பயன்படுத்தி சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.

அரிசியை ஊறவைத்து அரைத்து எடுத்துகொள்ளவும்.
அதனை ஒரு வாணலில் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
நன்கு கலவை போல் வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரிசி கலவை

பின்னர் இந்த கலவையில் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அவ்வப்போது சிறிது சிறிது பால் சேர்த்து மென்மையான கலவை போல் வரும்வரை கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உடல் முழுக்க நன்கு தேய்த்து பின் குளித்து வரலாம்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கி பொலிவு கிடைக்கும்.

மேலும் தோல் மென்மையாகவும், கரும்புள்ளிகளை அகற்றவும் இந்த கலவை உதவுகின்றது.

இந்த கலவையை அவ்வப்போது தயாரித்து பயன்படுத்துவதினால் சிறந்த பலன்களை அடையலாம்.

Source: https://ibctamil.com/article/rice-cream-home-made-pack-natural-whitening-tamil-1714045123?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version