Home இலங்கை அரசியல் நேர்மையான அரசியல்வாதியான சஜித்திடம் நாட்டை ஒப்படைக்கலாம் – ரிஷாட் பதியுதீன்

நேர்மையான அரசியல்வாதியான சஜித்திடம் நாட்டை ஒப்படைக்கலாம் – ரிஷாட் பதியுதீன்

0

நேர்மையான அரசியல்வாதியான சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) நாட்டை ஒப்படைக்கலாம் என இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15.08.2024) இடம்பெற்ற சஜித் பிரேமதாசவை
ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கைச்சாத்திடும் நிகழ்வில்
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும்,
கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31
வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்தோம்.

பலஸ்தீனர்களுக்கான பிரேரணை

இனவாதமில்லாத, வாக்குறுதிகளைக் காப்பாற்றும் நேர்மையான அரசியல்வாதி சஜித்.
அவருக்கு வழங்கப்படும் சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய
சிந்தனையாளர்.

எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் சஜித் பிரேமதாச, தனது சொந்த தொகுதிக்கு
மட்டுமின்றி முழு நாட்டுக்குமே உதவி செய்கிறார்.

மாணவர்களின் கல்வி
முன்னேற்றத்தில் தூரநோக்கோடு செயற்படும் இவர், நானூறு கற்றல் திரைகளை
பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளார். பாடசாலைகளுக்கு பேருந்துகளை அன்பளிப்புச்
செய்யும் கலாசாரத்தை சஜித் பிரேமதாசவே அறிமுகம் செய்தார்.

சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக வைத்தியசாலைகளில் மூச்சுவிடும்
திட்டத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார். காலத்தின் தேவைக்கேற்ற புதுப்புது
திட்டங்களை செயற்படுத்தும் இவரிடம் நாட்டை ஒப்படைப்பதே சிறந்தது.

ஜனாதிபதியாகத் தெரிவானால், பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட
வேண்டுமென எமது கட்சி நிபந்தனை விதித்துள்ளது.1967க்கு முன்னர் பலஸ்தீன்
இருந்ததைப் போன்று, பலஸ்தீன் பிரதேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதே
அதுவாகும்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version