Home முக்கியச் செய்திகள் யாழில் சுன்னாகம் பகுதியில் விபத்தில் சிக்கியவருக்கு நேர்ந்த கதி !

யாழில் சுன்னாகம் பகுதியில் விபத்தில் சிக்கியவருக்கு நேர்ந்த கதி !

0

யாழில் (Jaffna) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில்  இன்று (10) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்விபத்தில் காங்கேசன்துறை (Kangesanthurai) வீதி சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் கால் விரல்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி துண்டாகியுள்ளது.

போதனா வைத்தியசாலை

இதையடுத்து, காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பாக சுன்னாகம் காவல்துறையின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version