Home இலங்கை சமூகம் இலங்கையில் தவறான முடிவுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: வெளியான தகவல்

இலங்கையில் தவறான முடிவுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: வெளியான தகவல்

0

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தவறான முடிவுகளால் இழக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை (1)ஆம் திகதி முதல் (7) ஆம் திகதி வரை தேசிய காயம் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட  புள்ளிவிவரத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தவறான முடிவுகள்

இந்தநிலையில், தவறான முடிவுகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தவறான முடிவு தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசர தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Source: https://ibctamil.com/article/rising-suicides-in-sri-lanka-1720017154

NO COMMENTS

Exit mobile version