Home முக்கியச் செய்திகள் மன்னாரில் சூட்சுமமான முறையில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய பெண்!

மன்னாரில் சூட்சுமமான முறையில் கொள்ளை: பாதுகாப்பு கமராவில் சிக்கிய பெண்!

0

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம்
கிராமத்தில் சிறுவன் ஒருவருடன் சென்ற பெண்ணொருவர் சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டுள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25) காலை
இடம்பெற்றுள்ளது.

கொள்ளைச் சம்பவம்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண்ணொருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் பணத்தை கொடுக்க இவர்கள் குடிக்க நீர் கேட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண் சாத்திரம் பார்ப்பதாக கூறி வற்புறுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம்
பார்த்துள்ளார்.

காவல்துறையினரின் விசாரணை

அதேநேரம், குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து ஒன்றை
பூசி மயக்கமடைய செய்துள்ளார்.

இதையடுத்து, குறித்த பெண் மயக்கமடைந்தவர்களிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச்
சென்றுள்ளார்.

இதன்பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் காவல்துறை நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version