Home இலங்கை அரசியல் 13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

0

Courtesy: Sivaa Mayuri

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கான சஜித்தின் தீர்மானம் குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

“போருக்குப் பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் வட்டமேசை மாநாடு ஒன்றை நடத்த வேண்டும். 

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்

வட்டமேசை மாநாடு

அதேவேளை, சஜித் பிரேமதாசவின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டம் தொடர்பான (Sajith Premadasa) உறுதிமொழியை அடுத்து, அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் குழுக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chndrika Bnadarathunga), மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஜே.வி.பியினரும் (JVP) 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளனர். 

எனவே, இந்த திருத்தம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரது, நிலைப்பாட்டை கட்டியெழுப்ப உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துகின்றேன். 

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

குடிவரவுத் திணைக்களம் மக்களிடம் மீண்டும் விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம்: ஜெய்சங்கர் உறுதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version