Home இலங்கை குற்றம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் நடக்கும் பாரிய மோசடி அம்பலம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் நடக்கும் பாரிய மோசடி அம்பலம்

0

இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்களை வழங்கியமை விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரும் பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர்களே இவ்வாறு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கடவுச்சீட்டுகள்

இந்த கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும், இலங்கையில் இருந்து வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளாக இலங்கை குடிவரவு திணைக்களத்தின் தரவு அமைப்பில் இரகசியமாக பதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை குடிவரவு திணைக்களத்தின் சில ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் தரவு அமைப்பில் உள்ளிடப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்த விமான டிக்கெட்டுகள் ஆயிரம் முதல் பத்தாயிரம் தினார் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் படி, இலங்கையில் 20 போலி கடவுச்சீட்டுகள் 1000 முதல் 10000 டினார் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

இவற்றில் பெரும்பாலானவை வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version