Home இலங்கை சமூகம் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை அறிமுகம்

கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை அறிமுகம்

0

குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் தொடர்பான
முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்காணிக்கும் செயல்முறையைச்
சீரமைக்கும் நோக்கில் ‘கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை’
(Arrested Monitoring Information System – AMIS) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை
இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உடன் தெரிந்து கொள்ள முடியும் விடயம்

இந்த முறைமை மூலம், ஒரு நபர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றங்களுக்காகப்
புகாரளிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை அதிகாரிகள் உடனடியாகத் தெரிந்துகொள்ள
முடியும்.

இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக்கூடியது.

முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் பல நிறுவனங்களில் விசாரிக்கப்பட்டு நிரபராதி
என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டார்.

விடுவிப்பு

ஆனால், இப்போது சந்தேகநபரின் விபரங்களை AMIS தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து,
முந்தைய பதிவுகள் எதுவும் இல்லை என்றால், அவர் உடனடியாக விடுவிக்கப்படலாம்.

மேலும், நீதிமன்ற அழைப்பாணைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்களை இலகுவாக
அடையாளம் காணவும், கைது செய்யவும் இந்த முறைமை உதவுகிறது என்று காவல்துறை
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version