Home இலங்கை அரசியல் இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி

இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி

0

400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான்
பெட்ரோல், உணவு, எரிவாயு, மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு
ஆகியவற்றில் இருந்து எமது நாடு காப்பாற்றப்பட்டது.

இந்த உண்மையை மறைத்து ரணில்
விக்ரமசிங்க நரித்தனமாகப் பேசிச் திரிகின்றார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்
சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான பரப்புரைக் கூட்டங்களில்
உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடன் நிதி உதவி 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய
அரசு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்கை ரீதியாக முடிவு எடுத்தது.

இவை ரணில்
ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்கப்பட்டவை. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு மே
மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார். ரணில்
பதவிக்கு வந்து இவற்றைப் பயன்படுத்தினார்.

ரணில் பதவிக்கு வந்து சுய
முயற்சியால் இவற்றைக் கொண்டு வரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை
மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும்.

இதனாலேயே, இந்நாட்டில் அத்தியாவாசியப் பொருள் வரிசைகள் நின்றன.

மின் வெட்டு
நின்றது. விவசாயத்துக்குத் தேவையான உரம் கூட ஓமன் நாட்டில் இருந்து இந்தியக்
கடன் உதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதி தந்தது. இதுதான் உண்மை.

இதை
மறுக்க முடியுமா என சரடு விடுபவர்களுக்கும், உண்மை தெரியாமல் பேசி
திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன் என,

இந்திய தேசம்தான், எமது நாட்டைக் காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து
தான் ஏதோ நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்கிரமசிங்க
கூறி வருகின்றார்.

இந்தப் பொய்யை அவரது புதிய, பழைய எடுபிடிகளும் கூறி
வருகின்றார்கள். நாட்டில் ஒரு தரப்பினர் உண்மை தெரியாமல் இதை நம்புகின்றார்கள்.

400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய ஒன்றிய அரசு எமது
நாட்டுக்கு வழங்கியது.

அதேபோல் 400 கோடி இலங்கை ரூபா பெறுமதியான உணவுப்
பொருட்களை இந்திய தமிழ்நாடு மாநில அரசு எமக்கு வழங்கியது.

இவற்றால்தான் எமது வரிசைகள் நீங்கின. இவை ரணில் ஆட்சிக்கு வர முன்
தீர்மானிக்கப்பட்டவை.

இந்த உதவிகள் இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை
மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். ரணில் பதவிக்கு
வந்து அவற்றைப் பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால்
இவற்றைக் கொண்டு வரவில்லை. ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல்
நரித்தனமாகக் கூறி வருகின்றார் என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version