Home இலங்கை அரசியல் மாகாண சபை தேர்தலுக்கு தீவிர தயார்நிலையில் சஜித் அணி

மாகாண சபை தேர்தலுக்கு தீவிர தயார்நிலையில் சஜித் அணி

0

மாகாண சபைகளுக்குரிய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றி பெற முடியும் என்ற
முழு நம்பிக்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பு 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும், “அவ்வாறு நம்பிக்கை இருப்பதால்தான் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு
நான்கு எம்.பிக்கள் முன்வந்துள்ளனர். 

நாட்டு மக்களும் தேர்தலை எதிர்பார்த்துள்ளனர். இதனால் விரைவில் தேர்தலை நடத்த
வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்”  என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version