Home இலங்கை அரசியல் சபையில் மௌனிக்கப்பட்ட மின்கட்டண விவகாரம்.. எதிர்க்கட்சி தலைவர் ஆதங்கம்

சபையில் மௌனிக்கப்பட்ட மின்கட்டண விவகாரம்.. எதிர்க்கட்சி தலைவர் ஆதங்கம்

0

33 வீத மின்கட்டண குறைப்பு வழங்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் 18.3  வீத கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று (22.05.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கட்டண உயர்வு

குறித்த பதிவில், “இன்று நாடாளுமன்றத்தில் மௌனிக்கப்பட்டு விட்டது, எனவே நான் இங்கே கேட்கிறேன். 

33 வீத மின்கட்டண குறைப்பு வழங்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னர், மின் கட்டணங்கள் 18.3 வீதமாக உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, இப்போது தண்ணீர் கட்டண உயர்வுகள் ஏற்படும் எனவும் வதந்திகளாக உள்ளன. அவை எப்போது நடைமுறைக்கு வரும், ஏற்கனவே சிரமத்தில் உள்ள மக்களை அவை எவ்வளவு கடுமையாகப் பாதிக்கும்?” என வினவியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version