Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலில் சஜித் சாதனை வெற்றி: நம்பிக்கை வெளியிட்ட எம்.பி

அதிபர் தேர்தலில் சஜித் சாதனை வெற்றி: நம்பிக்கை வெளியிட்ட எம்.பி

0

அதிபர் தேர்தலில் சாதனை வெற்றியுடன் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நிறைவேற்று அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara)  தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேர்தலில் அதிகூடிய வாக்குகளை மாத்திரமன்றி அதிகூடிய வாக்கு வீதத்தையும் பெறும் அதிபர் பிரேமதாசவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விவரங்கள் 

இரண்டாவது வேட்பாளரை விட சஜித் பிரேமதாச குறைந்தது 30 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைகளின் மூலம் புள்ளி விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version