ஐக்கிய மக்கள் சக்தி, இந்த ஆண்டு தனது மே தினக் கூட்டத்தை தலவாக்கலையில்
நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியும்
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் என்று, அந்தக்கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
வழமையாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியே
தலவாக்கலையில் மே தின நிகழ்வை தொடர்ந்து நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
