Home இலங்கை பொருளாதாரம் தேங்காய்,அரிசியை தொடர்ந்து மற்றுமொரு பொருளின் விலையும் அதிகரிப்பு

தேங்காய்,அரிசியை தொடர்ந்து மற்றுமொரு பொருளின் விலையும் அதிகரிப்பு

0

தேங்காய்,அரிசியை தொடர்ந்து அத்தியாவசிய பொருளான உப்பின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம், வியாழக்கிழமை (6) முதல் உப்பு விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உப்பு விலை அதிகரிப்பு

இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் தூள் உப்பு விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட ஒரு கிலோ கட்டி உப்பு விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

உப்பு விலை அதிகரிப்பானது தற்காலிக தீர்மானம் என்று தெரிவித்த அவர், மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு உற்பத்தி கிடைத்தவுடன் உப்பு விலை குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விலை அதிகரிக்க காரணம்

மேலும், இந்தியாவில்(india) இருந்து உப்பு இறக்குமதி செய்வதனாலேயே உப்பின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version