இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் (R.Sampanthan) பூதவுடலுக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி கொழும்பில் காலமாகிய சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் (Trincomalee) உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாமல் ராஜபக்ச அஞ்சலி
இந்த நிலையில், திருகோணமலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (07) சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/sampanthan-passes-away-namal-final-tribute-trinco-1720329660
