Home இலங்கை அரசியல் சங்கு சின்னம் குறித்து பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

சங்கு சின்னம் குறித்து பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப்
பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை (Trincomalee) – உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இன்று (29.09.2024) இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் பொதுச்சபை

மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள்
பொதுச்சபை ஈடுபடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இக்கூட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ்
மக்கள் பொதுச் சபையை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version