Home முக்கியச் செய்திகள் நாளை பாடசாலை நடைபெறுவது தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

நாளை பாடசாலை நடைபெறுவது தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

0

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு(Colombo) லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளையும் (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

கல்வியமைச்சு அறிவிப்பு

இந்நிலையில் நாளை  பாடசாலை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், நாளைய தினம் வழமைப்போன்று பாடசாலைகள் இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையுடன், ஆசிரியர்-அதிபர்கள் ஒன்றிணைந்த குழு இன்று (26) கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version