Home இலங்கை அரசியல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் ஆலோசனை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் ஆலோசனை

0

இலங்கை (Sri Lanka) பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில்
செய்யும் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
(Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (15) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று கடைத்தொகுதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுக்கும் போது நாட்டை இழுத்து மூடும் நிலமையில் தான்
இருந்தது.

மக்களுக்கு நம்பிக்கை

மருந்து இல்லை, பெட்ரோல் இல்லை, சாப்பாடு, மா, அரிசி, எதுவும் இல்லாத
நிலமையிலே தான் இருந்தது. இந்தநிலையில், தான் அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) நாட்டை முன்னெடுத்து,
நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கினார்.

ஆனாலும் ஒரு
நாளில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடையாது. படிப்படியாகத்தான்
பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில்
முழுமையான தீர்வு வராது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் அதிபர் ரணில் இந்த நாட்டை மீண்டும் வாழ வைக்க
முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளார்.

ரணிலின் வழிகாட்டல்

ரணிலின் வழிகாட்டுதலின் பெயரில் மக்கள் அதிகளவு வந்து செல்லும் இடங்களை நாம் அதிகளவு கருத்திற் கொண்டு, நான் சுமார் 12 புதிய பொதுச் சந்தைக் கட்டடங்களை திறந்து வைத்துள்ளேன்.

பொருளாதார ரீதியில் நாம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளர்சியடைய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஒரு வல்லரசு நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version