Home இலங்கை அரசியல் வெடித்துள்ள ஷிராந்தி கைது விவகாரம் : மகிந்த சிங்கம் என கர்சிக்கும் மொட்டு

வெடித்துள்ள ஷிராந்தி கைது விவகாரம் : மகிந்த சிங்கம் என கர்சிக்கும் மொட்டு

0

 ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) கோரிக்கை விடுத்தார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.” – என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் (sagara kariyawasam)தெரிவித்தார்.

ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்யவேண்டாமென மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தாரென வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மகிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம்

 “மகிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம். சிங்கம் ஒருபோதும் புல் தின்னாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  தேசிய மக்கள் சக்தியால் பரப்பப்பட்ட போலி தகவல்

“இது திட்டமிட்ட அடிப்படையில் பரப்பட்ட வதந்தியாகும். தேர்தல்காலத்தைப்போன்று தேசிய மக்கள் சக்தியால் திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்பட்ட போலி தகவலே இது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.

சிலவேளை போலிக் கடிதங்களைக்கூட தயாரித்திருக்கலாம்.” – மகாநாயக்க தேரர்களிடம் மகிந்த ராஜபக்ச இப்படியொரு கோரிக்கையை விடுக்கவே இல்லை.” – என்றார்.

NO COMMENTS

Exit mobile version