Home முக்கியச் செய்திகள் சிலாபத்தில் மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்திய கணவன் !

சிலாபத்தில் மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்திய கணவன் !

0

சிலாபத்தில் (Chilaw) துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (16) சிலாபம் – விலத்தவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதையடுத்து, படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சற்றுமுன்னர் கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version