Home இலங்கை சமூகம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் கையெழுத்து வேலைத்திட்டம்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: யாழில் கையெழுத்து வேலைத்திட்டம்!

0

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி கையெழுத்து பெறும் வேலை திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது இன்று (19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

கையெழுத்து போராட்டம்

அந்தவகையில், தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை, அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என கோரியே கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

மேலும், குறித்த கையெழுத்து போராட்டம் நாட்டின் 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version